கனமழை காரணமாக நெல்லையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கனமழை காரணமாக நெல்லையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Update: 2021-11-08 16:12 GMT
கோப்புப்படம்
நெல்லை,

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சென்னையானது வெள்ளத்தில் தவித்து வருகிறது. 

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்திலும் கனமழையானது விடாமல் பெய்து வருகிறது. இதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்