கூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்

கூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி திடீர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-11-19 18:41 GMT
வள்ளியூர்,

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும், அங்கு 4 அணுஉலைகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் 2-வது அணுஉலையில் மின் உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அங்கு மின்உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக அங்கு நடந்து வந்த 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த தொழில்நுட்ப கோளாறு ஓரிரு நாட்களில் சரி செய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதலாவது அணு உலையில் தற்போது 1,000 மெகாவாட் மின் உற்பத்தி தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்