நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை?

ரெட் அலர்ட்டை தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-25 13:31 GMT
சென்னை,

வங்கக் கடலில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. மேலும் 4 நாள்களுக்கு மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மிக பலத்த மழை பெய்யும் என்று 6 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில்  எந்தெந்த மாவட்டங்களுக்கு நாளை  பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்ற  தகவல் வெளியாகி உள்ளது. 

அதில்,

*  ரெட் அலர்ட்டை தொடர்ந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, புதுகோட்டை, விருதுநகர், அரியலூர், திண்டுக்கல், தேனி,  பெரம்பலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில்  பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து அம் மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

* கனமழை காரணமாக மதுரை, திருவாரூர்,  ராமநாதபுரம்,சிவகங்கை, திருச்சி 
மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்