தமிழ்நாட்டிற்கு இன்று 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 29-ம் தேதி வரை கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கன முதல் மிக கனமழை பெய்யலாம் என்பதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.