தமிழகத்தில் மேலும் 740- பேருக்கு கொரோனா தொற்று

கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 765 பேர் குணம் அடைந்துள்ளனர்.

Update: 2021-11-27 14:35 GMT
சென்னை,

தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: 

தமிழகத்தில் மேலும்  740 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 27 லட்சத்து 24 ஆயிரத்து 731 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 765 பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்பால் ஒரே நாளில்  11- பேர் உயிரிழந்துள்ளனர். 

இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  36,454 ஆக உயர்ந்துள்ளது.  தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 01 ஆயிரத்து 030- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 

மேலும் செய்திகள்