தமிழ்நாட்டில் மேலும் 730 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழ்நாட்டில் இன்று மேலும் 730 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
அதன்படி, தமிழ்நாட்டில் புதிதாக இன்று 730 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 26 ஆயிரத்து 197 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 767 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 81 ஆயிரத்து 434 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தாக்குதலுக்கு இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 472 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் கொரோனா வைரசுக்காக 8291 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.