சிவசங்கர் பாபா வீட்டின் ரகசிய அறையில் சோதனை

சிவசங்கர் பாபா வீட்டின் ரகசிய அறையில் சோதனை.

Update: 2021-11-29 19:20 GMT
சென்னை,

நடன சாமியார் என்று அழைக்கப்படும் சிவசங்கர் பாபா மீது, அவரது பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் 5 பேர் பாலியல் புகார் கொடுத்தனர். சிவசங்கர் பாபா தங்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக சிவசங்கர் பாபா மீது 4 போக்சோ வழக்குகளும், ஒரு பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்குகளை பதிவு செய்து விசாரித்தனர். 5 வழக்குகளிலும் அவர் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் சிவசங்கர் பாபா வீட்டில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினார்கள்.

இந்தநிலையில் சிவசங்கர் பாபா வீட்டில் உள்ள ரகசிய அறை ஒன்றில் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் திறந்து சோதனை போட்டனர். கூடுதல் ஆதாரங்களை கைப்பற்றுவதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்