தமிழகத்தில் மேலும் 720 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 720 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-11-30 13:55 GMT
சென்னை, 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்  720 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.   தமிழக கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: -

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்  720 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட்டுள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய 99,795 - மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.  மொத்த பாதிப்பு எண்ணிக்கை   27,26,917 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 758 பேர்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 9 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 26,82,192 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 36,481 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி தனிமையில் உள்ளவர்கள் உள்பட 8,244 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் செய்திகள்