தைப்பூசத்தை முன்னிட்டு தென்மாவட்ட ரெயில்கள் மேல்மருவத்தூரில் நிற்க ஏற்பாடு - தென்னக ரெயில்வே

தைப்பூசத்தை முன்னிட்டு, தென்மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரெயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-12-03 21:20 GMT
மதுரை,

தைப்பூசத்தை முன்னிட்டு, தென்மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரெயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட தென்மாவட்ட ரெயில்கள் வருகிற 13-ந் தேதியில் இருந்து அடுத்த மாதம் 19-ந் தேதி வரை மேல்மருவத்தூரில் தற்காலிகமாக ஒரு நிமிடம் நின்று செல்லும். 

அதாவது, மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில், சென்னை-திருச்சி மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், சென்னை-செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ், சென்னை-கொல்லம் எக்ஸ்பிரஸ், தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் இரு மார்க்கங்களிலும் மேல்மருவத்தூரில் நின்று செல்லும். 

அதேபோல, ராமேசுவரம்-புவனேசுவர் வாராந்திர எக்ஸ்பிரஸ், மதுரை-லோகமானிய திலக் குர்லா வாராந்திர எக்ஸ்பிரஸ், ராமேசுவரம்-பனாரஸ் வாராந்திர எக்ஸ்பிரஸ், மதுரை-சென்னை (மயிலாடுதுறை வழி) வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களும் 19-ந் தேதி வரை இயக்கப்படும் நாட்களில் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தென்னக ரெயில்வே தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்