தமிழக செய்தி துறை அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழக செய்தி துறை அமைச்சர் சாமிநாதனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-12-16 09:52 GMT


கோவை,


தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் சமீப காலங்களாக குறைந்து வருகின்றன.  ஊரடங்கில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.  தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.  எனினும், பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும்படி அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், கொரோனாவின் உருமாறிய வகையான ஒமைக்ரான் பாதிப்புகளும் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றன.  இந்த நிலையில், தமிழக செய்தி துறை அமைச்சர் சாமிநாதனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.  அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்