க.அன்பழகனின் உருவ சிலையை திறந்து வைத்தார் -முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை நந்தனத்தில் க.அன்பழகனின் உருவ சிலையை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை
பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை நந்தனத்தில் க.அன்பழகனின் உருவ சிலையை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த நிதித்துறை வளாக கட்டிடத்தில் க.அன்பழகனின் மார்பளவு சிலையை அவர் இன்று திறந்து வைத்தார் ,
மேலும் கருவூல கணக்கு தொடர்பான அலுவலகங்கள், ஓய்வூதிய இயக்ககம், மாநில, உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தணிக்கை அலுவலகங்கள் மற்றும் அரசு சிறுசேமிப்பு துறை உள்ளிட்ட 15 அலுவலகங்கள் இயங்கி வரும் இவ்வளாகத்திற்கு “பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை” என்று பெயர் சூட்டப்பட்டது.