சுனாமியில் இறந்தவர்களுக்கு அஞ்சலி

ஜெகதாப்பட்டினத்தில் சுனாமியில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2021-12-26 18:31 GMT
கோட்டைப்பட்டினம், 
தமிழகத்தில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி சுனாமி எனும் பேரலை ஏற்பட்டது. இதில் தமிழகத்தின் கடலோர கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் அலையில் சிக்கி உயிரிழந்தனர். இதையடுத்து, உயிரிழந்த மீனவர்களுக்கு ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 26-ந் தேதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் சார்பில் சுனாமியில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது பெண்கள் கடலில் பாலை ஊற்றி அஞ்சலி செலுத்தினர். மேலும், மீனவர்கள் கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

மேலும் செய்திகள்