கோவை விமான நிலையத்தில் துப்பாக்கி, தோட்டாக்களுடன் பிடிபட்ட காங்கிரஸ் பிரமுகர்
துப்பாக்கி, தோட்டாக்களுடன் கேரளா காங்கிரஸ் பிரமுகர் கோவை விமான நிலையத்தில் பிடிபட்டார்.
கோவை
கேரளாவை சேர்ந்தவர் கே.எஸ்.பி. தங்கல், காங்கிரஸ் பிரமுகர் . பட்டாம்பு நகராட்சி முன்னாள் தலைவரான இவர் பட்டாம்பியில் பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார்.
கோவையில் இருந்து பெங்களூரு விமானத்தில் செல்லும்போது அவர் 22 ரக கைத்துப்பாக்கி, 7 புல்லட்டுகளுடன் பிடிபட்டார். துப்பாக்கி வைத்திருக்க இவர் உரிமம் வைத்திருக்க வில்லை. இதை தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.