நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை 19-ந்தேதி நடக்கிறது.

Update: 2022-01-13 23:50 GMT
சென்னை,

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சாதாரண தேர்தலை சுமுகமாக நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக்கூட்டம் வருகிற 19-ந்தேதி நடக்கிறது.

கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய கூட்டரங்கில் அன்றைய தினம் பகல் 11.30 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்