தடையை மீறி போராட்டம்: அண்ணாமலை உள்பட பா.ஜ.க.வினர் 200 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை உள்பட பா.ஜ.க.வினர் 200 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-01-26 14:05 GMT
சென்னை, 

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மைக்கேல்பட்டில் பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கோரியும், கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழக பா.ஜ.க. சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நேற்று  உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. 

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மூத்த நிர்வாகிகள் பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் கொரோனா காலக்கட்டத்தில் போலீசார் அனுமதி இன்றி தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அண்ணாமலை உள்பட பா.ஜ.க.வினர் 200 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேட்டு 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

மேலும் செய்திகள்