நள்ளிரவில் பதற்றம்: பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-02-09 21:44 GMT
சென்னை, 

சென்னையில் தி.நகர் பகுதியில் நள்ளிரவில் பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அந்த பகுதியில்  போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

முன்னதாக பாஜக தலைமை அலுவலகத்தி கதவு சாத்தப்பட்டு இருந்ததால் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. 3 மது பாட்டில்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது. சம்பவ இடத்தில் துணை ஆணையர் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்