சென்னை புறநகரில் 2 லாரிகள் கவிழ்ந்து விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்கள்

மணிமங்கலம் அருகே லாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2022-04-06 09:30 GMT
காஞ்சிபுரம், 

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே வண்டலூர்-வாலாஜாபாத் சாலை வழியாக 2 லாரிகள் ஜல்லிக்கற்களுடன் அதிக பாரத்தை ஏற்றிக் கொண்டு ஒன்றின் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த லாரி திடீரென முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.

இதனால் 2 லாரிகளும் ரோட்டில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. ஜல்லிக்கற்கள் சாலையில் சிதறியதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதே சமயம் லாரி ஓட்டுநர்கள் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

மேலும் செய்திகள்