புதுச்சேரி-கடலூர் சாலை சீரமைப்பு

விபத்தை தடுக்க புதுச்சேரி-கடலூர் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-04-24 18:05 GMT
புதுச்சேரி- கடலூர் சாலையில் பல்வேறு இடங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. சில நேரங்களில் உயிரிழப்புகளும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.  இந்த நிலையில் விபத்தை தடுக்க தவளக்குப்பம் அடுத்த இடையார்பாளையம் பகுதியில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சிமெண்டு கலவையை கொட்டி பொதுப்பணித்துறையினர் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  
இந்த பணிகளை நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ராமமூர்த்தி நேரில் ஆய்வு செய்தார். இருப்பினும் சாலையை முழுவதும் சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்