தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று குறைந்தது

தமிழகத்தில் நேற்று 89- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று பாதிப்பு 50 க்கும் கீழ் குறைந்துள்ளது.

Update: 2022-05-08 14:12 GMT
சென்னை,

தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:  கடந்த 24 மணி நேரத்தில் 47- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 54 ஆயிரத்து 353- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 68- ஆகும். கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு இல்லை. 

தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்து 881- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தலைநகர் சென்னையில்  23- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் நேற்று 89- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று பாதிப்பு 50 க்கும் கீழ் குறைந்துள்ளது. 

மேலும் செய்திகள்