24 மதுபாட்டில்கள் பறிமுதல்
விருதுநகர் அருகே 24 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.;
விருதுநகர் அருகே உள்ள குல்லூர் சந்தை தெற்கு தெருவை சேர்ந்தவர் குருசாமி (வயது 36). இவர் வீட்டில் வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் சூலக்கரை போலீசார் அவர் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் 24 மதுபாட்டில்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், குருசாமியை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.