விருதுநகரில் நடைபெறும் 2-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் - தங்க அணிகலன், தங்கத் தகடு கண்டெடுப்பு

அகழாய்வில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமான தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Update: 2023-06-06 22:00 GMT

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு 16 அகழாய்வுக் குழுகள் தோண்டப்பட்டுள்ள நிலையில், இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமான தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தங்கத்தால் ஆன 2 கிராம் பட்டையான தோடு, தங்கத் தகடு மற்றும் தலா 2.2 கிராம் அளவில் தங்க குமிழ் வடிவிலான பொருள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் வந்து அகழாய்வுப் பணிகளை பார்த்துச் செல்கின்றனர்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்