மதுபாட்டில்கள் வைத்திருந்த 3 பேர் கைது

மதுபாட்டில்கள் வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2022-11-26 19:45 GMT

பேரையூர், 

சேடப்பட்டி போலீசார் மதுவிலக்கு சம்பந்தமாக ரோந்து சென்றனர். அப்போது பெரியகட்டளையை சேர்ந்த குருவுத்தாய் (வயது 35) என்பவர் விற்பனை செய்வதற்காக 12 மதுபாட்டில்கள் வைத்திருந்த போது ரோந்து சென்ற போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். இதேபோல் அயோத்திபட்டியை சேர்ந்த பேச்சியம்மாள் (60) என்பவரிடமிருந்து 16 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். டி.கல்லுப்பட்டியை சேர்ந்த முத்து (37) என்பவரிடமிருந்து 11 மதுபாட்டில்களை டி.கல்லுப்பட்டி போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்