கஞ்சாவுடன் 3 வாலிபர்கள் கைது

கஞ்சாவுடன் 3 வாலிபர்கள் கைது

Update: 2023-01-24 18:35 GMT

ராமநாதபுரம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆசைத்தம்பி தலைமையிலான போலீசார் தங்கப்பாநகர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் அரைகிலோ கஞ்சா பொட்டலங்களாக போட்டு விற்பனைக்காக கொண்டு வந்தது தெரிந்தது. இதனை தொடர்ந்து போலீசார் ஏர்வாடி தர்கா காட்டுப்பள்ளி சம்சுதீன் (வயது23), தவ்பீக்அகமது (20), ராமநாதபுரம் யாதவர்தெரு விமல் (20) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் ராமநாதபுரம் தங்கப்பாநகர் பாரீஸ் என்பவரிடம் இருந்து வாங்கி வந்து விற்பனைக்காக கொண்டு சென்றது தெரிந்தது. இதனை தொடர்ந்து போலீசார் பாரீஸ் என்பவரை தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்