மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 350 மனுக்கள்

நாகை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 350 மனுக்கள் பெறப்பட்டது

Update: 2023-09-25 18:45 GMT


நாகை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வங்கிக்கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 350 மனுக்கள் பெறப்பட்டது. அதை தொடர்ந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பேபி, சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துணை கலெக்டர் கார்த்திகேயன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்