நாமக்கல் அருகேகார் கவிழ்ந்து 4 பேர் காயம்

Update: 2023-06-30 19:00 GMT

நாமக்கல் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயம் அடைந்தனர்.

சாமி தரிசனம்

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்தவர் அருள்பாரதி. இவர் அதே பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன், அய்யனாரப்பன், சுகவனேஸ்வரன் ஆகியோருடன் நேற்று அதிகாலை பழனிக்கு சாமி தரிசனம் செய்ய காரில் சென்றார்.

பின்னர் அவர்கள் 4 பேரும் பழனியில் சாமி தரிசனம் செய்துவிட்டு கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

4 பேர் காயம்

காரை அய்யனாரப்பன் ஓட்டி சென்றார். நாமக்கல் அருகே கருப்பட்டிபாளையம் என்ற இடத்தில் மேம்பாலத்தில் சென்றபோது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணம் செய்த 4 பேரும் லேசான காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்