முயல் வேட்டையில் ஈடுபட்ட 46 பேருக்கு அபராதம்

பழனி அருகே முயல் வேட்டையில் ஈடுபட்ட 46 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.;

Update:2022-08-03 00:36 IST

பழனி அருகே உள்ள தொப்பம்பட்டி பகுதியில் ஒரு கும்பல் முயல் வேட்டையில் ஈடுபடுவதாக பழனி வன அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பழனி வனச்சரகர் பழனிகுமார் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது ஒரு கும்பல் வனத்துறை வாகனத்தை கண்டதும் தப்பியோடியது.அவர்களை வனத்துறை அதிகாரிகள் சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்பு வேட்டையில் ஈடுபட்ட 46 பேரை பழனியில் உள்ள தனியார் மண்டபத்துக்கு அழைத்து வந்தனர். விசாரணையில், அவர்கள் கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பாதிரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் என்றும், ஆண்டுதோறும் ஆடி 18 தினத்தை முன்னிட்டு முயல் வேட்டையில் ஈடுபடுவதாக கூறினர். இதையடுத்து 46 பேருக்கும் தலா 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்த 4 முயல்கள் மற்றும் வேட்டைக்கு பயன்படுத்திய 26 நாய்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்