குட்கா விற்ற 5 பேர் சிக்கினர்

குட்கா விற்ற 5 பேர் சிக்கினர்

Update: 2023-07-03 20:00 GMT

கோவை

கோவையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் கோவையில் தீவிர குட்கா வேட்டை நடந்தது. அப்போது கெம்பட்டி காலனியில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே குட்கா விற்றதாக கிருஷ்ணமூர்த்தி(வயது 46) என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதேபோன்று பெரிய கடை வீதியில் உள்ள ஒரு கடையில் குட்கா விற்ற ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முருகானந்தம்(50), ஐந்து முக்கு பகுதியில் குட்கா விற்ற கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த நஜிப்(54), மணியகாரம்பாளையத்தில் உள்ள பெட்டிக்கடையில் குட்கா விற்ற பேச்சு முத்து(62), கணபதி சங்கனூர் ரோட்டில் உள்ள புத்தக கடையில் குட்கா விற்ற ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஜெயசீலன்(50) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்