சினிமா இயக்குனருக்கு 6 நாட்கள் போலீஸ் காவல்

ஆபாச படம் எடுத்த வழக்கில் கைதான சினிமா பட இயக்குனருக்கு 6 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி சேலம் மகளிர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2022-09-09 20:33 GMT

ஆபாச படம் எடுத்த வழக்கில் கைதான சினிமா பட இயக்குனருக்கு 6 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி சேலம் மகளிர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

ஆபாச படம்

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வீரப்பன்பாளையத்தை சேர்ந்தவர் வேல்சத்ரியன் (வயது 38). சினிமா பட இயக்குனரான இவர், சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைவார்த்தை கூறி இளம் பெண்களை வைத்து ஆபாச படம் எடுத்ததாக புகார் எழுந்தது.

அதன்பேரில் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்சத்ரியன், அவரது பெண் உதவியாளர் ஜெயஜோதி ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் ஏராளமான இளம் பெண்கள் வேல்சத்ரியனால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

போலீஸ் காவல்

இந்த நிலையில் வேல்சத்ரியனை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு, சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார், சேலம் கூடுதல் மகளிர் விரைவு நடுவர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து வேல்சத்ரியனுக்கு 6 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி சேலம் கூடுதல் மகளிர் விரைவு நடுவர் கோர்ட்டு உத்தரவிட்டது. பின்னர் போலீசார் வேல்சத்ரியனை விசாரணைக்கு பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

முழு விவரம்

இது குறித்து போலீசார் கூறும்போது, வேல்சத்ரியனிடம் விசாரணை நடத்த 6 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அவரை தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்படும். அப்போது தான் அவரால் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டனர் என்ற முழு விவரம் தெரிய வரும் என்று கூறினர்.

இதனிடையே வேல்சத்ரியனின் பெண் உதவியாளர் ஜெயஜோதியை 3 நாள் போலீஸ் விசாரணைக்கு பிறகு நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து போலீசார் அவரை சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்