கார் கண்ணாடியை உடைத்த 6 பேர் கைது

கார் கண்ணாடியை உடைத்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-11 20:27 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் பி.எஸ்.கே. நகரை சேர்ந்தவர் பாலா ராஜேஷ் (வயது 33). இவர் தனது நண்பர்களுடன் முடங்கியார் சாலையில் உள்ள தோட்டத்திற்கு காரில் சென்றார். பின்னர் அவர் மீண்டும் திரும்பி ராஜபாளையம் வரும் போது தாலுகா அலுவலகம் முன்பு 6 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்து காரின் கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது. அத்துடன் காரில் உள்ளவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து அவர்கள் வைத்திருந்த செல்போனை திருடி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாலா ராஜேஷ் அளித்த புகாரின் பேரில் வடக்கு போலீசார், 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்