பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது

வேடசந்தூர் அருகே, பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-19 16:14 GMT

வேடசந்தூர் அருகே உள்ள கூவக்காபட்டி சிவன்கோவில் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு துர்காதேவிக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் கூம்பூர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை பிடித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், வேடசந்தூரை சேர்ந்த தன்ராஜ், டீயாலோ, சிவா, கிருஷ்ணராஜ், சின்னத்துரை, அழகாபுரியை சேர்ந்த பரமன், காசிபாளையத்தை சேர்ந்த ஆறுமுகம், கூவக்காப்பட்டியை சேர்ந்த உதயகுமார் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.1,300 மற்றும் 7 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்