90 வயது மூதாட்டி தலையில் டி.வி.யை போட்டு கொன்ற கொடூர பேரன்

90 வயது மூதாட்டி தலையில் டி.வி.யை போட்டு கொன்ற கொடூர பேரனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-28 18:45 GMT

கீழக்கரை, 

90 வயது மூதாட்டி தலையில் டி.வி.யை போட்டு கொன்ற கொடூர பேரனை போலீசார் கைது செய்தனர்.

பாட்டி-பேரன்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அண்ணாநகரை சேர்ந்தவர் லட்சுமணன்(வயது 32). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி குடும்ப தகராறு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

லட்சுமணனுடன் அவருடைய பாட்டி மாரியம்மாள்(90) வசித்து வந்தார். மாரியம்மாளிடம், லட்சுமணன் அடிக்கடி பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு லட்சுமணன் தனது பாட்டி மாரியம்மாளிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த லட்சுமணன் வீட்டில் இருந்த பழைய டி.வி.யை எடுத்து மாரியம்மாள் தலையில் ஓங்கி போட்டுள்ளார்.

டி.வி.யை போட்டு கொலை

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மாரியம்மாள் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொடூர சம்பவம் குறித்து தகவல் அறிந்த கீழக்கரை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் மூதாட்டியின் உடலை பரிேசாதனைக்காக கீழக்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமணனை கைது செய்தனர். இ்ச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்