திண்டிவனம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து; 12 பேர் காயம்

திண்டிவனம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் 12 போ் காயமடைந்தனர்.

Update: 2023-10-22 18:45 GMT

திண்டிவனம்

சாலையில் கவிழ்ந்தது

சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 60). இவர் தனது குடும்பத்தினருடன் ஒரு சரக்கு வாகனத்தில் அாியலூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு நேற்று புறப்பட்டார்.

திண்டிவனம் புறவழிச்சாலை நத்தமேடு பகுதியில் வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி டிரைவா் புருஷோத்தமன் (30) ஜார்ஜ், சாந்தி (51), சரவணன் (45), கலைவாணி (32), லோகேஸ்வரன் (12), மகேந்திரன் (14), மணிகண்டன் (31), முத்துகிருஷ்ணன் (29), அனுசுயா (28), கோவிந்தன் (4), குகன் (2) உள்பட 12 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

12 பேர் காயம்

விபத்து குறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டிவனம் போலீசார் விபத்துக்குள்ளான வாகனத்தை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

இதனிடையே விபத்தில் காயமடைந்த 12 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஜார்ஜ், லோகேஸ்வரன் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டிவனம் தாசில்தார் சிவா மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்