மனநலம் பாதிக்கப்பட்டவர் அடித்துக்கொலை

கோவையில் மனநலம் பாதிக்கப்பட்டவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இதற்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-05-05 18:45 GMT

கோவை

கோவையில் மனநலம் பாதிக்கப்பட்டவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இதற்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலையோரத்தில் பிணம்

கோவை குனியமுத்தூரில் உள்ள குளிப்பை சந்து பகுதியில் சாலையோரத்தில் ஒருவர் உடலில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள், குனியமுத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு தலை, கை கால்களில் கட்டையால் தாக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் ஒருவர் இறந்து கிடப்பதை கண்டனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அடித்துக்கொலை

அதில், இறந்து கிடந்தவர் குனியமுத்தூர் ரைஸ்மில் ரோட்டை சேர்ந்த நாகராஜ் (வயது 42) என்பது தெரியவந்தது. மேலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், உருட்டு கட்டையால் தலையில் தாக்கி கொலை செய்யப்பட்டு உள்ளார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

எதற்காக இந்த கொலை நடந்தது என்பது தெரியவில்லை, அதை கண்டுபிடிக்க அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்