வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை

பாலியல் பலாத்கார வழக்கில் கைதான வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-07-05 09:59 GMT

திருப்பூர்

தஞ்சாவூர் கீழ்வாசல் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 34). இவர் திருப்பூர் கே.வி.ஆர்.நகரில் தங்கியிருந்து பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 17-4-2015 அன்று 16 வயது மாணவியை கடத்திச்சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து தெற்கு மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சசிகுமாரை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. போக்சோ பிரிவுக்கு சசிகுமாருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.ஆயிரம் அபராதம், கடத்திச்சென்ற பிரிவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.ஆயிரம் அபராதம் விதித்து ஏககாலத்தில் அனுபவிக்க நீதிபதி பாலு தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்