கீரனூர் பொன்னி நகர் பகுதிைய சேர்ந்தவர் பழனியம்மாள். இவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மொபட்டுக்குள் நல்ல பாம்பு புகுந்தது. இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் இதுகுறித்து கீரனூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், வீரர்கள் விரைந்து வந்து பாம்பு பிடிக்கும் கருவி கொண்டு 6 அடி நீளமுள்ள விஷப்பாம்பை பிடித்து காட்டுக்குள் கொண்டு விட்டனர்.