தொழிலாளி வீட்டுக்குள் புகுந்த பாம்பு

நத்தத்தில் தொழிலாளியின் வீட்டிற்குள் பாம்பு புகுந்தது.

Update: 2023-10-04 22:00 GMT

நத்தம் கோவில்பட்டியை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 49). கூலித்தொழிலாளி. இவரது வீட்டுக்குள் நேற்று பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதனை பார்த்த ராமதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் அலறியடித்தபடி வெளியே ஓடினர். பின்னர் இதுகுறித்து நத்தம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வீட்டுக்குள் பதுங்கியிருந்த சுமார் 6 அடி நீள நல்லபாம்பபை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு நத்தம் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அந்த பாம்பை கரந்தமலை வனப்பகுதியில் விட்டனர்.

இதேபோல் நத்தம் அருகே மேலமேட்டுபட்டியை சேர்ந்த கார் டிரைவர் முகமது இர்பான் (40) என்பவரது வீட்டின் அருகில் உள்ள கொட்டகையில் புகுந்த மற்றொரு பாம்பையும் தீயணைப்பு படைவீரர்கள் பிடித்து நத்தம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்