தனியார் கல்லூரி மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த மாணவி பலி

வந்தவாசி அருகே தனியார் கல்லூரி மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த மாணவி பரிதாபமாக இறந்தார்.;

Update:2023-09-12 23:11 IST

வந்தவாசி

வந்தவாசி அண்ணாசாமி முதலி தெருவைச் சேர்ந்தவர் குருசாமி, பள்ளித் தலைமை ஆசிரியர். இவரது மனைவி வெங்கடேஸ்வரி, ஆசிரியை

இவர்களது மகள் அர்ச்சனா (வயது 19). வந்தவாசி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். இறுதியாண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் கல்லூரிக்கு சென்ற அர்ச்சனா இரண்டாம் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இதில் தலையில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்