பெண் கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

விருத்தாசலத்தில் பெண் கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Update: 2023-06-20 18:45 GMT

கடலூர்

விருத்தாசலம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்தி மற்றும் போலீசார் விளக்கப்பாடி கிராமத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு ஒரு பெண், கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தார். இதை பார்த்த போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மனைவி தனலட்சுமி (வயது 33) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனலட்சுமியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து சுமார் 1,150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான தனலட்சுமி மீது விருத்தாசலம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, கம்மாபுரம், சேத்தியாத்தோப்பு, விருத்தாசலம் ஆகிய போலீஸ் நிலையங்களில் 4 கஞ்சா வழக்குகள் உள்ளன. இதனால் அவரது தொடர் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு தனலட்சுமியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், குண்டர் சட்டத்தில் தனலட்சுமியை கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கஞ்சா வியாபாரி தனலட்சுமியிடம், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்