நிலக்கோட்டை அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

நிலக்கோட்டை அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-07-04 21:00 GMT

நிலக்கோட்டையை அடுத்த கோட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்குமார் (வயது 25). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி பரணி (22) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில வாரங்களாகவே கார்த்திக்குமார் வயிற்று வலியால் அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் அவர் சிகிச்சை பெற்றார். ஆனால் வயிற்று வலி சரியாகவில்லை.

இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட கார்த்திக்குமார் நேற்று முன்தினம் மதியம் வீட்டின் மேற்கூரையில் சேலையால் தூக்குப்போட்டார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக கார்த்திக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், கார்த்திக்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்