மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

ஆண்டிப்பட்டி அருகே மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியடைந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-08-02 21:00 GMT

ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 35). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர். மாரிமுத்து தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி, தனது மகன்களுடன் மாரிமுத்துவை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியடைந்த மாரிமுத்து தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

அதன்படி, நேற்று முன்தினம் டி.ராஜகோபாலன்பட்டியில் உள்ள செங்கல் காளவாசல் அருகே விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மாரிமுத்து ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்