நிலக்கோட்டை அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

நிலக்கோட்டை அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-10-31 16:53 GMT

நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டியை சேர்ந்த அழகர் மகன் கண்ணன் (வயது 33). கூலித்தொழிலாளி. இவர் தீராத வயிற்று வலியாக அவதியடைந்து வருகிறார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் கண்ணன் சிகிச்சை பெற்றார். ஆனால் வயிற்று வலி சரியாகவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட கண்ணன் இன்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், கண்ணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த தற்கொலை குறித்து விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்