உத்தமபாளையம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

உத்தமபாளையம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-01-13 20:30 GMT

உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). கூலித்தொழிலாளி. இவருக்கு சசிகலா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

இந்தநிலையில் சிவக்குமாருக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் அவர் சிகிச்சை பெற்றார். ஆனால் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட சிவக்குமார் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்