பெரியகுளம் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

பெரியகுளம் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-03-01 20:45 GMT

பெரியகுளம் அருகே உள்ள தெய்வேந்திரபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 60). கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதனால் அவரால் சரியாக வேலைக்கு செல்ல முடியவில்லை. பாஸ்கரன் சிலரிடம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. உடல்நிலை பாதிக்கப்பட்டு, வேலைக்கு செல்ல முடியாததால் அவரால் கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை.

இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டைவிட்டு வெளியே சென்ற பாஸ்கரன், அப்பகுதியில் உள்ள தைலாராமன் கோவில் அடிவாரத்துக்கு சென்றார். அங்கு விஷத்தை குடித்து அவர் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பாஸ்கரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த தற்கொலை குறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்