விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

பழனி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-04-23 21:00 GMT

பழனியை அடுத்த பாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 65). விவசாய கூலித்தொழிலாளி. கடந்த சில நாட்களாக இவர் உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட குப்புசாமி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது விஷத்தை குடித்தார்.

இதில், மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்