சரக்கு வேனில் புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது

சரக்கு வேனில் புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update:2022-08-22 23:32 IST

அறந்தாங்கி:

அறந்தாங்கி அருகே மேலப்பட்டு பகுதியில் அறந்தாங்கி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மணமேல்குடி சீதாராமன்பட்டினத்தை சேர்ந்த சதாம் உசேன் (வயது 26) என்பவர் ஓட்டி வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது சரக்கு வேனில் புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து ரூ.28 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, சதாம் உசேனை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்