கூட்டுறவு சார்பதிவாளர் பணியிடை நீக்கம்

Update: 2023-04-25 19:40 GMT

சேலம் கூட்டுறவுத்துறை பொதுவினியோக திட்டத்தில் சார் பதிவாளராக பிரேமா பணியாற்றி வந்தார். இவர் வருகிற 30-ந் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெற இருக்கிறார். இவர் ஏற்கனவே பணியின் போது முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் மீது வணிக பொருளாதார குற்றப்புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஓய்வு பெற இருந்த நிலையில் பிரேமாவை பணியிடை நீக்கம் செய்து சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்