பரமத்தி அருகேலாரி- மோட்டார் சைக்கிள் மோதல்; மூதாட்டி பலி

Update: 2023-09-11 19:00 GMT

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் சிங்கிலிப்பட்டி அருகே உள்ள கணவாய்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மனைவி அருக்காணி (62). இவர்களுடைய மகன் வடிவேல் (45). மெக்கானிக். இவர் பரமத்திவேலூர் அருகே கீழ்சாத்தம்பூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்காக தாய் அருக்காணியை மோட்டார் சைக்கிளில் பின்னால் அமரவைத்துக் கொண்டு பரமத்தி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது கிழக்கு பெருமாபாளையம் அருகே வந்தபேழது எதிர்திசையில் வந்த முட்டை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அருக்காணி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். வடிவேல் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அருக்காணியை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிய ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.பரமத்தி அருகே


Tags:    

மேலும் செய்திகள்