சேலம் டால்மியா போர்டு டைடல் பார்க் எதிரில் நேற்று முன்தினம் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். யார் அவர்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் ஏதும் தெரியவில்லை. இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.