இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு தப்ப முயன்ற 7 அகதிகள் பிடிபட்டனர்

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு தப்ப முயன்ற 7 அகதிகள் பிடிபட்டனர்.

Update: 2022-07-06 18:50 GMT

ராமேசுவரம், 

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் வாழ முடியாமல் கடுமையாக கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் இலங்கை மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் இருந்து நேற்றுமுன்தினம் நள்ளிரவு தமிழகத்திற்கு தப்பி வர முயன்ற 7 அகதிகளையும் மற்றும் 2 படகோட்டிகளையும் இலங்கை கடற்படையினர் படகுடன் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இலங்கையில் இருந்து இதுவரை 90-க்கும் மேற்பட்ட அகதிகள் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்