மது விற்ற முதியவர் கைது

சிவகிரியில் மது விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-11 19:00 GMT

சிவகிரி:

சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஜிவ் தலைமையில் போலீசார் சிவகிரி மெயின் பஜார், பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ராயகிரி தெற்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சீனிவாசன் (வயது 75) என்பவர் சிவகிரி பஸ் நிலையம் அருகே மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார்.

இதையடுத்து போலீசார், அவரை கைது செய்து 71 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்